ஆத்தியடி பிள்ளையார் கோவில் - கட்டிட வேலைகள்

மேன்மைகொள் ஆத்தியடியான் பெருமை விளங்குக.

உலகமெல்லாம் என்று எண்ணித் தனது அடியார்கள் சிலரை உலகம் முழுவதும் அனுப்பியுள்ளார். இந்த முறை செய்யும் கும்பாவிடேகத்தில் தனது எல்லாச் சந்நிதிகளையும் பூரணமாகத் திருத்தி அமைத்து கும்பாவிடேகம் செய்யும்படி பல அன்பர்களுக்குக் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.

பரந்து வசிக்கும் அடியார்கள் பண உதவி மட்டுமே செய்ய முடிகின்றது. அவரைச் சுற்றி இருக்கும் அடியார்கள் உடல் பொருள் இரண்டாலும் விடா முயற்சியுடன் தளராது கட்டிடவேலைகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நாங்கள் மனதிலே கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத அளவு கட்டிடவேலை மிகவும் சிறப்பாக நடை பெறுகிறது என்பதை என்ணும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது

இந்த பெருமை எல்லாம் ஆத்தியடி வாழ் மெய்யன்பர்களுக்கே உரியது. அவர்கள் மெம்மேலும் விடா மென்மேலும் விடா முயற்சியுடன் கட்டிடவேலைகளைச் செய்து விரைவில் கும்பாவிடேகம் சிறப்பாக நடைபெற பிள்ளையார் அருள்புரியட்டும்!

No comments: