ஆத்தியடி பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள்

ஆத்தியடி பிள்ளையார் கோவிலின் தற்போதைய பிரதம குருக்களாக சிவஸ்ரீ ஆனந்தவிஜய மதியாபரணக்குருக்கள் அவர்கள் கடமை ஆற்றுகின்றார். முறையாக இந்து சமய மந்திரங்களையும் விதி முறைகளையும் பயின்று 1984 ம் ஆண்டு குருக்கள் பட்டம் பெற்றார்.

குருக்கள் அவர்கள் 1989 ம் முதல் எமது ஆலயத்தின் பொறுப்பை ஏற்று நித்திய பூஜைகளையும் விசேஷ பூஜைகளையும் மிகவும் சிறப்பாக நடாத்திவருகின்றார்.

குருக்கள் அவர்கள் காட்டுப்பாதி முருகன் கோவிலிலும் தினமும் பூஜைகள் செய்து வருகின்றார்

25 வருடங்களுக்கு மேலாக (1964-1989) எமது கோவிலின் பிரதம குருக்களாக இருந்து எமது அன்புக்குப் பாத்திரமான சிவஸ்ரீ சிதம்பரபிள்ளை குருக்களின் மகள் இந்திராதேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது இல்லற வாழ்க்கையின் பயனாக லாவன்யா, லவன்ராஜ், லக்க்ஷன், ஆர்த்தியா ஆகிய நால்வரும் பிறந்தார்கள்.
குருக்களும் அவர் குடும்பமும் பிள்ளையார் அருள் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.

No comments: