நந்தனவருட நிகழ்ச்சிநிரல் (2012 சித்திரை - 2013 சித்திரை)

எமது ஆலயத்தில் 2012,2013 ஆம் வருடம் நடைபெறும் பூஜைகள் பற்றிய விபரங்களை வழமை போன்று இப்பகுதியின் ஊடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இதில் பூஜைகள் ,திருவிழாக்கள் நடைபெறும் ஆங்கிலத்திகதி , கிழமை , தமிழ்திகதி , பூஜை விபரம் ,உபயகாரர் பெயர் என முழுமையான விபரத்தையும் அறியலாம்.

நந்தனவருட நிகழ்ச்சிநிரல் - 1 (13/04/2012 - 29/11/2012)

நந்தனவருட நிகழ்ச்சிநிரல் - 2 (30/11/2012 - 30/03/2013)

குறிப்பு :-நவராத்திரிவிரதம் 7 ம் நாள் உபயம் வருகின்ற வருடம் 2013 ம் ஆண்டு செய்ய விரும்புபவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளவும்..
நன்றி
மேலும் வாசிக்க.......

கட்டிட நிதி உதவி

கும்பாபிஷேகம் நிறைவு பெற்று மண்டலாபிஷேகங்கள் ஜூலை 21 வரை நடைபெறும்.  தொடர்ந்து 22 ம் திகதி சங்கா அபிஷேகம் நடைபெற உள்ளது.
அழகாக கட்டப் பட்ட கோவிலின், கட்டிட செலவு விபரத்தை   பார்க்க   இங்கே   அழுத்தவும். (PDF Format)
உங்கள் எல்லோரினதும் உதவியை கோவில் சபை வெகுவாக எதிர் பார்க்கின்றது

.
உங்கள் எல்லோருக்கும் பிள்ளையார் அருள் புரிவாராக.
மேலும் வாசிக்க.......

மகா கும்பாபிஷேகம் - நிறைவு


வெகு ஆவலுடன் எதிர் பார்த்திருந்த பிள்ளையார் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக இனிதே நடந்தேறியுள்ளது.கணபதி ஹோம பூசை சிறப்புற நடந்தது.
கணபதி ஹோம திருநீறும் மூலஸ்தான விநாயகரின் படமும், கும்பாபிஷேக வீடியோவும் பிள்ளையாரின் அடியார்கள் அனைவருக்கும் அனுப்ப உள்ளோம்.

அனுப்ப வேண்டிய முகவரியை தொடர்பு - படிவத்தில் பதிவு செய்யுங்கள்.
அல்லது E - Mail   பண்ணுங்கள்.

மஹா கும்பாபிஷேக படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்.www.arthiady-pilliyar.blogspot.com



திருப்பணி வேலைகளுக்கு உதவி பிள்ளையாரின் அருளைப் பெறுவீர்களாக!
மேலும் வாசிக்க.......

பிள்ளையார் கோவில் வீடியோ காட்சி

பிள்ளையார் கோவிலில் கடந்த இரண்டரை வருடங்களாக தொடர்ந்து நடந்த திருப்பணி வேலைகள் எதிர் பார்த்ததுபோல, நிறைவேறிக் கொண்டிருகின்றது.  சங்கா அபிஷேகத்திற்குப் பின்னும், தொடர்ந்து  மணி மண்டபமும், இராஜகோபுரமும், சுற்று மதிலும் கட்டப்பட வேண்டியுள்ளது.  இப்பணியும்  இனிதே நிறைவேற உதவி, பிள்ளையாரின் அருளைப் பெறுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
பிள்ளையார் கோவில் வீடியோ காட்சி   Click here to view

<<<  புதிய கோவில் கட்டிடம் பற்றிய  உங்கள் தெரிவு: (YOUR VOTE)

நன்றி

மேலும் வாசிக்க.......

மஹா கும்பாபிஷேகம் (12-06-2011)

ஆத்தியடி பிள்ளையார் கோவில் (2011 ஆண்டு ஜூன் மாதம் 12 ம் திகதி) மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,


1. கும்பாபிஷேக பூசைக்கு உதவி செய்தோர் விபரம்  Click here to View

2. "மண்டலா அபிஷேக" பூசை - 40 நாள் உபயகாரர் விபரம்  Click here to View

3. இயந்திர" பூசை - 40 நாள் உபயகாரர் விபரம்  Click here to View

4. கட்டிட நிதிக்கு அன்பளித்தோர் விபரம்:  Click here to View

சகலதையும் அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.


ஆத்தியடி பிள்ளையாரின் அருளும் கருணையும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
மேலும் வாசிக்க.......

மகாலட்சுமி (அம்மன் விக்கிரகம்)

ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலின் உள் வீதியின் தென் மேற்கு மூலையில் தாமரைப் பூவில் அமர்ந்து சகல சௌபாக்கியங்களையும் அருள் பாலிக்க வல்ல "மகாலட்சுமி" அம்மனை மஹா கும்பாபிஷேக்தன்று (ஜூன் 12, 2011) பிரதஷ்டை செய்யப்படவுள்ளது.

இவ்வளவு காலமும் அம்மன் சுவாமி இல்லையே என்ற குறையும் பிள்ளையாரின் கருணையினால் தீர்த்து வைக்கப்பட்டு விட்டது.
மகாலக்சுமி அம்மன் சகல மக்களுக்கும் அருள் புரிவார் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

அம்மனின் வேறு சில படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

திருப்பணி படங்களைப் பார்க்க:arthiady-pillaiyarphoto.blogspot.com




நன்றி
மேலும் வாசிக்க.......

மகா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா 2011


அன்புடையீர்!


நிகழும் மங்களகரமான கரவருஷம் வைகாசிமாதம் 29 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (12-06-2011)  பூர்வபக்க ஏகாதசி திதியும், சித்திரைநட்சத்திரமும்,  இடபலக்கினமும்,  சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்தமான அதிகாலை 5.53 மணி தொடக்கம் 6.13 மணி வரையான காலப்பகுதியில் ஆத்தியடிப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள விநாயகப்பெருமானுக்கும்,  பரிவாரத்தெய்வங்களான,  மகாலட்சுமி, சுப்பிரமணியர்,  நாகதம்பிரான்,  வரைவர்,  சண்டேஸ்வரர் ஆகிய மூர்த்திகளிற்கும் பிரதிஸ்ரா மகா கும்பாபிஷேகம் நடத்த இறைவன் திருவருள் கூடியுள்ளது.

எனவே இவ் இறைகைங்கரியங்களில் பங்கேற்பதுடன் பொருள்,சரீர,பண உதவிகளையும் வழங்கி எம்பெருமானது இஷ்டசித்திகளை பெறுமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம்
ஆத்தியடிப்பிள்ளையார் கோயில் தருமபரிபாலன சபை
ஆத்தியடி, புலோலி மத்தி, பருத்தித்துறை



எல்லோர்க்கும் ஆண்டவன் அருள் புரிவாராக.
நன்றி.

 




மேலும் வாசிக்க.......

திருப்பணி மிகுதி வேலைத் திட்டம்

2008 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பிள்ளையாரின் அருளினால் 45% இற்கு மேல் பட்ட திருத்த வேலைகள் மிகவும் நல்ல வகையில் செய்யப்பட்டுள்ளது. மிகுதி வேலைகளை முடிப்பதற்கு இன்னும் 163 இலட்சம் ரூபா வரை தேவையாக உள்ளது.

3, 4 & 5 ம் கட்ட வேலை மதிப்பீடு (பக்கம் 1/3 - பார்க்க)
3, 4 & 5 ம் கட்ட வேலை மதிப்பீடு (பக்கம் 2/3 - பார்க்க)
3, 4 & 5 ம் கட்ட வேலை மதிப்பீடு (பக்கம் 3/3 - பார்க்க)
செய்து முடிக்கப் பட்ட வேலை விபரம் - பார்க்க (PROGRESS REPORT)

1, 2 ம் கட்ட மிகுதி வேலை மதிப்பீடு ................ 2,949,835.00 ரூபா
3 ம் கட்ட வேலை மதிப்பீடு .............................. 10,682.959.00 ரூபா
4 ம் கட்ட வேலை மதிப்பீடு.................................. 1,770,000.00 ரூபா
5 ம் கட்ட வேலை மதிப்பீடு..................................... 897,400.00 ரூபா


கடந்த 6 மாதங்களாக பண பற்றாக் குறைவினால் இடை நிறுத்தி வைக்கப்பட்ட வேலைகள் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 1 ம் திகதி முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

2011 ஆண்டு ஆவணி மாதமளவில் கும்பாவிஷேகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் உதவியை சபை வெகுவாக எதிர் பார்க்கின்றது

பிள்ளையாரின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
மேலும் வாசிக்க.......

திருப்பணி உதவி


ஆத்தியடிப் பிள்ளையார் அன்பர்களே!

கடந்த ஒரு வருட காலமாக எமது கோவிலில் பல திருத்த வேலைகள் நடைபெற்று இன்னும் பல வேலைகள் செய்யப் படவேண்டிய நிலையில் உள்ளது. இறைவன் அருளால் பல அன்பர்கள் உதவி செய்த போதிலும் இன்னும் கணிசமான பணம் தேவைப் படுகின்றது.

2011 ஆண்டு ஆவணி மாதமளவில் கும்பாவிஷேகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உங்கள் உதவியை சபை வெகுவாக எதிர் பார்க்கின்றது.

சபையின் வேண்டுகோள் பக்கம் 1/2
சபையின் வேண்டுகோள் பக்கம் 2/2

புதிய கோவில் படங்களைப் பார்க்க:......



உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரிவாராக.
நன்றி.
மேலும் வாசிக்க.......

திருத்த வேலை புகைப்படங்களும் அன்பளிப்பும் செலவு விபரமும்

2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் பிள்ளையார் கோவிலில் நடைபெறும் திருத்தவேலைகளின் படங்களை அவ் அப்போது www.arthiadypillaiyarphoto.blogspot.com (படங்கள்) என்ற இணையத்தளத்தில் சேர்த்துக்கொண்டு வருகின்றோம்.
அத்துடன் மாதா மாதம் கோவிலுக்கு கொடுக்கப்படும் நன்கொடை விபரமும் செலவு விபரமும் www.arthiadypillaiyar.blogspot.com (நன்கொடை) என்ற இணையத்தளத்தில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.
உங்களினால் ஆன உதவியை செய்து பிள்ளையாரின் அருளைப் பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கோவில் வங்கிக் கணக்கில் சில அடியார்கள் நேரடியாக திருப்பணி அன்பளிப்பு செய்துள்ளார்கள். அவ்வடியார்கள் சிலரின் பெயர் விபரம் எமக்கு தெரியாமல் இருக்கின்றது.
நீங்கள் அன்பளிப்பு செய்த தொகை விபரத்தை தயவு செய்து எமக்கு தெரியப்படுத்தவும்.
மின் அஞ்சல் முகவரி: arthiady.pillaiyar@gmail.com .

நன்றி.
மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை பங்குனி 2010 / மாசி 2011 (மாதா மாதம்)

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் பங்குனி 2010 முதல் மாதா மாத வரவு செலவு கணக்கு அறிக்கையை சுருக்கமாக இங்கே தந்துள்ளோம். உங்களினால் திருப்பணி உதவியை செய்து பிள்ளையாரின் அருளைப் பெற வேண்டுகின்றோம்.

திருப்பணி நன்கொடை விபரங்களை http://www.arthiadypillaiyar.blogspot.com/ இல் பார்க்கலாம்.
நன்றி..!!
மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை 2009 / 2010

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் 01.03.2009 முதல் 28.02.2010 வரைக்குமான வரவு செலவு கணக்கு அறிக்கையை சுருக்கமாக இங்கே தந்துள்ளோம். இவ் அறிக்கை கணக்கு பரிசோதர்களால் சரி பிழை பார்க்கப் பட்டு, 2010 சித்திரை 17 ம் திகதி அன்று நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் சபையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

/>வரவு செலவு சுருக்கம் - 1/2

வரவு செலவு சுருக்கம் - 2/2
மேலும் வாசிக்க.......

தமிழ் வருடப்பிறப்பு பூஜை

விரைவில் எதிர்பாருங்கள் எமது இணையத்தில்

தமிழ் வருடப்பிறப்பு பூஜை இதனைத் தொடர்ந்து சதுர்த்திப்பூஜை என எமது ஆலயத்தில் நடைபெறும் எல்லா பூஜைகளினதும் முழுமையன விபரத்தை தொடர்ந்து வரும் வாரங்களில் வெளிநாடுகளில் வதியும் எம் உறவுகளிற்ககாக..
மேலும் வாசிக்க.......

விகிர்த்திவருட நிகழ்ச்சிநிரல் (2010 சித்திரை 14 - 2011 சித்திரை 13)

எமது ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் புஜைகள் ,திருவிழாக்களின் நிகழ்ச்சிநிரலினை இப்பகுதியின் ஊடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இதில் புஜைகள் ,திருவிழாக்கள் நடைபெறும் ஆங்கிலத்திகதி , கிழமை , தமிழ்திகதி , புஜை விபரம் ,உபயகாரர் பெயர் என முழுமையான விபரத்தையும் அறியலாம்.

விகிர்த்திவருட நிகழ்ச்சிநிரல் - 1 (14/04/2010 - 12/11/2010)

விகிர்த்திவருட நிகழ்ச்சிநிரல் - 2 (13/11/2010 - 13/04/2011)

திருத்தம் :- விநாயகவிரதம் 17 ம் நாள் உபயம் திரு.க.இராமச்சந்திரன் என எழுதப்பட்டுள்ளது. திரு.ச.இராமச்சந்திரன் என திருத்தி படிக்கவும் , நவராத்திரிவிரதம் 8 ம் நாள் உபயம் திருமதி.ந.கோகிலதாஸ் என எழுதப்பட்டுள்ளது. திருமதி.ந.சண்முகநாதன் என திருத்தி படிக்கவும் .
நன்றி
மேலும் வாசிக்க.......

எழுத்தாசிரியர் உரை (ஆத்தியடிப்பிள்ளையார் கோவில் திருவிழாக்கள்)

ஆலயம் என்பது 'ஆ'-ஆன்மா 'லயம்'-லயிக்கும் இடம் எனவும் கோயில் என்னும் போது 'கோ'-இறைவன் 'இல்”-;வாழும் இடம் என்றும் பொருள் கொள்ளப்படும். ஆலயங்கள் ஆகமவிதிக்கேற்ப அமைக்கப்படுவதுடன் அங்கு இடம் பெறும் பூசைகிரிகைகள் விழாக்கள் என்பனபும் ஆகம விதிக்கேற்பவே நிகழ்த்தப்படுகின்றது.இருப்பினும் சில ஆலயங்களில் தொடர்ந்து பின்னற்றப்படும் மரவு முறைகளிற்கு ஏற்ப கிரிகைமுறைகளில் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்படுவது உண்டு.


இந்து தர்மத்தில் பிரபஞ்சசக்தியை பரமாத்மா எனவும் மனிதசக்தியை ஜீவாத்மா எனவூம் கூறப்பட்டுள்ளது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு அல்ல இரண்டும் வேறுபட்டநிலைகள் பரமாத்மாவின் ஒரு அங்கமான ஜீவாத்மா முயன்றால் பரமாத்மாவோடு தன்னனை ஜக்கியப்படுத்திக் கொள்ளமுடியூம்.ஜீவாத்மா பலஹீனமடையூம் போது தெய்வத்திடமிருந்து சக்தியை( பரமாத்மாவிடமிருந்து சக்தியை) பெற்றுக்கோள்ளவேணடும். இவ் அடிப்படை உள்ளார்ந்ததத்துவத்தின் காரணமாக உருவாக்கப்பட்டதே ஆலயங்கள். ஆலயங்களில் தெய்வவிக்கிரகங்களை மனிதன் தான் பிரதிட்டை செய்கின்றான் பரந்து பட்ட பிரபஞசம் முழுவதும் விலாபித்திருக்கும் தெய்வசக்தியை மந்திர உச்சாடனங்கள் ,பஜனைகள் ,அபிடேக,ஆராதனைகள் மூலம் ஒடுக்கி தெய்வ விக்கிரகங்களில் சக்தியை ஏற்றுகின்றான். அதே போல் தனக்கு துன்பம் நேரும்போது பிரார்த்தனைமுலம் தெய்வத்திடமிருந்து சக்தியை பெற்று தனது துன்பத்தை போக்கிக்கோள்ளுகின்றான்.

எமது மூதாதையரால் ஏற்றியூம் போற்றியூம் தொண்டாற்றப்பட்ட ஆத்தியடிப்பிள்ளையார் ஆலயம் கிட்டத்தட்ட இருநுர்று ஆண்டு பழமையான வரலாற்றைக் கொண்டது வேண்டுவாரின் வினை தீர்த்து வரமருளும் விநாயக்பெருமான் உறையூம் திருக்கோயில் வருடாவருடம் நெறிமுறை தவறாது நித்திய, நைமித்திய பூசைகள் சிறப்புற நடந்த வண்ணமுள்ளது இவ்வாறு ஆலயவிழாக்கள் ஆலய விழாக்கள் ஒழுங்குடன் நடாத்துவிக்கப்படுவதாலே எமது ஆலயம் இன்றும் புகழ்பூத்தவண்ணம் உள்ளது.

ஆத்தியடிப்பிள்ளையார் கோயில் நடாத்தப்படும் பூசைகள் விழாக்கள் பற்றி பலரும் அறிந்திருப்பினும் இங்கு நிகழ்தப்படும் விழாக்கள் பற்றி பிற்காலத்தவர் அறியூம் நோக்குடனும் கிரிகை விளக்கத்தை ஓரளவிற்கேனும் அறிந்திடும் நோக்குடனும் எமது முன்னவர்களால் வெளியிடப்பட்ட கும்பாவிஷேக நுர்ல் ,தருமபரிபாலனசபை நுர்ற்றாண்டுவிழாமலர், மகோற்சவக்குருக்கள்,ஆலயக்குருக்கள் போன்றோரிடம் கேட்டு அறிந்தவை,சைவசித்தாந்த, சைவசமயகிரிகைகள் போன்ற நுர்ல்களில் இருந்தும் சேர்க்கப்பட்ட தகவல்களைக்கொண்டும் இத் தொகுப்பை ஆக்கியூள்ளேன்.


DR சோ.கனகசுந்தரம் B.S.M.S(SL)
ஆத்தியடி,பருத்தித்துறை
(ஆயூள்வேத வைத்தியசாலை)
(நானாட்டான்,மன்னார்)
மேலும் வாசிக்க.......

Request from Arthiady Pillaiyar Temple, Point Pedro

Dear Devotees of Arthiady Pillaiyar,
ஆத்தியடிப் பிள்ளையார் அன்பர்களே!


இவ் ஆலயத்தினை புனரமைக்க வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்பட்டு, திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றது. சுண்ணாம்பினால் கட்டப்ப்பட்ட இவ் ஆலயம் கறையாண் புற்றுக்கள் ஏற்பட்டு உதிர்ந்து கொட்டுப்பட்டு மிக மிக பழுதான நிலையில் இருந்தது. தற்பொழுது பல திருத்தங்கள் செய்த போதிலும் மேற் கொண்டு பல வேலைகள் செய்வதற்கு உங்களின் உதவியை நாடுகின்றோம்.

To read the Request from Tharumaparipalana Sabhai: Page 1/1

தருமபரிபாலன சபையின் வேண்டுகோள் பக்கம்: 1/2 ஐ வாசிக்க....
தருமபரிபாலன சபையின் வேண்டுகோள் பக்கம்: 2/2 ஐ வாசிக்க.....

உங்களினால் ஆன உதவியை செய்து பிள்ளையாரின் அருளைப் பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.
மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை பங்குனி 2009 / மாசி 2010 (மாதா மாதம்)

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் பங்குனி 2009 முதல் மாதா மாத
வரவு செலவு கணக்கு அறிக்கையை சுருக்கமாக இங்கே தந்துள்ளோம்.
மாசி மாத கணக்கு அறிக்கை - 1
மாசி மாத கணக்கு அறிக்கை - 2
தை மாத கணக்கு அறிக்கை
மார்கழி மாத கணக்கு அறிக்கை
கார்த்திகை மாத கணக்கு அறிக்கை
ஐப்பசி மாத கணக்கு அறிக்கை
புரட்டாசி மாத கணக்கு அறிக்கை
ஆவணி மாத கணக்கு அறிக்கை
ஆடி மாத கணக்கு அறிக்கை
ஆனி மாத கணக்கு அறிக்கை
வைகாசி மாத கணக்கு அறிக்கை
சித்திரை மாத கணக்கு அறிக்கை
பங்குனி மாத கணக்கு அறிக்கை

உங்களினால் திருப்பணி உதவியை செய்து பிள்ளையாரின் அருளைப் பெற வேண்டுகின்றோம்.

திருப்பணி நன்கொடை விபரங்களை www.arthiadypillaiyar.blogspot.com இல் பார்க்கலாம்.
நன்றி..!!

மேலும் வாசிக்க.......

நூற்றாண்டு மலர் 2004

ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் தரும பரிபாலன சபை, பிள்ளையார் கோவிலின் நூறு வருட பூர்த்தியை முன்னிட்டு "நூற்றாண்டு மலர்" ஒன்றை 2004 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இம் மலரில் கோவில் வரலாறு, தரும பரிபாலன சபைக் கீதம், ஊஞ்சல்,நாயகன் பதிகம், தரும பரிபாலன சபை நடந்து வந்த பாதை, மற்றும் அன்பும் அறனும், சமுகத்தில் சமயம் என்ற கட்டுரைகளும் சனசமுக நிலையம், சைவ மன்ற பாலர் பாடசாலை பற்றிய விபரங்களும் என சகல விடயங்களும் அடங்கி உள்ளன.நூற்றாண்டு மலரை ஒவ்வொரு பக்கமாக http://www.arthiady-pillaiyar100year.blogspot.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து உள்ளோம்.
முழு மலரையும் PDF வடிவில் பெற விரும்பின் arthiady.pillaiyar@gmail.comஎன்ற மின் அஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளவும்
"நூற்றாண்டு மலர் 2004" தவறாமல் எல்லோரும் படிக்க வேண்டியது மலர் ஆகும்.
மேலும் வாசிக்க.......

ஆத்தியடி பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள்

ஆத்தியடி பிள்ளையார் கோவிலின் தற்போதைய பிரதம குருக்களாக சிவஸ்ரீ ஆனந்தவிஜய மதியாபரணக்குருக்கள் அவர்கள் கடமை ஆற்றுகின்றார். முறையாக இந்து சமய மந்திரங்களையும் விதி முறைகளையும் பயின்று 1984 ம் ஆண்டு குருக்கள் பட்டம் பெற்றார்.

குருக்கள் அவர்கள் 1989 ம் முதல் எமது ஆலயத்தின் பொறுப்பை ஏற்று நித்திய பூஜைகளையும் விசேஷ பூஜைகளையும் மிகவும் சிறப்பாக நடாத்திவருகின்றார்.

குருக்கள் அவர்கள் காட்டுப்பாதி முருகன் கோவிலிலும் தினமும் பூஜைகள் செய்து வருகின்றார்

25 வருடங்களுக்கு மேலாக (1964-1989) எமது கோவிலின் பிரதம குருக்களாக இருந்து எமது அன்புக்குப் பாத்திரமான சிவஸ்ரீ சிதம்பரபிள்ளை குருக்களின் மகள் இந்திராதேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது இல்லற வாழ்க்கையின் பயனாக லாவன்யா, லவன்ராஜ், லக்க்ஷன், ஆர்த்தியா ஆகிய நால்வரும் பிறந்தார்கள்.
குருக்களும் அவர் குடும்பமும் பிள்ளையார் அருள் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.
மேலும் வாசிக்க.......

பணிவான வேண்டுகோள் - தர்மபரிபாலன சபை

ஆத்தியடிப் பிள்ளையார் திருவடி போற்றி.

ஆத்தியடிப் பிள்ளையார் அன்பர்களே!

இவ் ஆலயத்தினை புனரமைக்க வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. சுண்ணாம்பினால் கட்டப்ப்பட்ட இவ் ஆலயம் கறையாண் புற்றுக்கள் ஏற்பட்டு உதிர்ந்து கொட்டுப்பட்டு மிக மிக பழுதான நிலையில் உள்ளது.

பக்கம்: 1/2 ஐ வாசிக்கவும்.
பக்கம்: 2/2 ஐ வாசிக்கவும்.

நன்றி.
மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை 2008 / 2009

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் 01.03.2008 முதல் 28.02.2009 வரைக்குமான வரவு செலவு கணக்கு அறிக்கையை இங்கே தந்துள்ளோம். இவ் அறிக்கை கணக்கு பரிசோதர்களால் சரி பிழை பார்க்கப் பட்டு, 2009 சித்திரை 18 ம் திகதி அன்று நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் சபையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பக்கம் 1/8 வரவு செலவு சுருக்கம், பாலஸ்தாபனம், சந்தா
பக்கம் 2/8 வங்கிக் கணக்கும் அன்பளிப்பும்
பக்கம் 3/8 நானாவித வரவு, உபய வரவு, பாலஸ்தாபன செலவு
பக்கம் 4/8 பூஜை செலவு, உபயச் செலவு, வங்கி கணக்கு இலக்கம்
பக்கம் 5/8 நானாவித செலவு
பக்கம் 6/8 திருப்பணி அன்பளிப்பு செய்தோர்
பக்கம் 7/8 திருப்பணி அன்பளிப்பு செய்தோர்
பக்கம் 8/8 திருப்பணி அன்பளிப்பு செய்தோர்

நன்றி


மேலும் வாசிக்க.......

வருடாந்த பொதுச்சபை கூட்டம் 2009

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலனசபை வருடாந்த பொதுச்சபை கூட்டம் 2009 சித்திரை 18 ம் திகதி ஆலய மண்டபத்தில் நடந்தது.

கூட்டறிக்கை பக்கம் 1
கூட்டறிக்கை பக்கம் 2
கூட்டறிக்கை பக்கம் 3
கூட்டறிக்கை பக்கம் 4

மேலும் வாசிக்க.......