அன்புடையீர்!
நிகழும் மங்களகரமான கரவருஷம் வைகாசிமாதம் 29 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (12-06-2011) பூர்வபக்க ஏகாதசி திதியும், சித்திரைநட்சத்திரமும், இடபலக்கினமும், சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்தமான அதிகாலை 5.53 மணி தொடக்கம் 6.13 மணி வரையான காலப்பகுதியில் ஆத்தியடிப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள விநாயகப்பெருமானுக்கும், பரிவாரத்தெய்வங்களான, மகாலட்சுமி, சுப்பிரமணியர், நாகதம்பிரான், வரைவர், சண்டேஸ்வரர் ஆகிய மூர்த்திகளிற்கும் பிரதிஸ்ரா மகா கும்பாபிஷேகம் நடத்த இறைவன் திருவருள் கூடியுள்ளது.
எனவே இவ் இறைகைங்கரியங்களில் பங்கேற்பதுடன் பொருள்,சரீர,பண உதவிகளையும் வழங்கி எம்பெருமானது இஷ்டசித்திகளை பெறுமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
இங்ஙனம்
ஆத்தியடிப்பிள்ளையார் கோயில் தருமபரிபாலன சபை
ஆத்தியடி, புலோலி மத்தி, பருத்தித்துறை
எல்லோர்க்கும் ஆண்டவன் அருள் புரிவாராக.
நன்றி.
No comments:
Post a Comment